தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
நமது நிருபர்
தமிழக மக்கள் ‘ரீல்ஸ்’ மோகத்தில் இருக்கின்றனர் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக மக்கள், ‘ரீல்ஸ்’, சோஷியல் மீடியா மோகத்தில் உள்ளனர். முதல்வர் அலுவலகத்திலேயே இதுபோல் நடப்பது தவறான முன்னுதாரணம்.
த.வெ.க.,வில் எம்.எல்.ஏ.,க்கள் யாரென்று தொகுதி மக்களுக்கே தெரியாத நிலை உள்ளது. மகளிர் உரிமைத்தொகை 2,500 ரூபாயாக வழங்க, முதல்வர் விஜய் அவகாசம் கேட்டுள்ளார். அவரை நம்பி ஓட்டுபோட்ட மக்கள் தான், இதுபற்றி யோசிக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மிகப்பெரிய அளவில் பொருளாதார சீரழிவை ஏற்படுத்தும்; மீண்டும் ஒரு லாக் டவுனுக்கு வழிவகுக்கும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வையும், சிலிண்டர் தட்டுப்பாட்டையும் நீக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறுபிரேமலதா கூறினார்.
Source: Dinamalar