தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
சென்னை: ‘பதவி ஆசைக்காக ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சென்ற காங்கிரஸ் கட்சியுடன் இனி எந்த காலத்திலும் கூட்டணி இல்லை’ என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்தார்.
தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்காக தி.மு.க., இளைஞரணி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியதாவது :
20 ஆண்டுகள் நம் தோள் மீது சவாரி செய்த காங்கிரஸ் நம் முதுகில் குத்தி விட்டு, பதவி ஆசைக்காக ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சென்றுவிட்டது. இனி எந்த காலத்திலும் அக்கட்சியுடன் கூட்டணி வைக்கக் கூடாது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றிக்கு, தி.மு.க., உழைப்பு தான் காரணம். தமிழக மக்கள் காங்கிரசுக்கு நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
Source: Dinamalar